முகப்பு
நாமக்கல்

உள்ளாட்சித் தேர்தல் வாடகை நிலுவை: கார் ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் முறையீடு

உள்ளாட்சித் தேர்தல் வாடகை நிலுவை தொகையை வழங்கக் கோரி கார் ஓட்டுநர்கள் நாமக்கல் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வாடகை கார் ஓட்டுநர்கள்.
பகிர்:

உள்ளாட்சித் தேர்தல் வாடகை நிலுவை தொகையை வழங்கக் கோரி கார் ஓட்டுநர்கள் நாமக்கல் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் பயன்பாட்டுக்காக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கார்களை வாடகைக்கு எடுத்தது. ஓராண்டாகியும் இதுவரை வாடகை தொகையை முழுமையாக வழங்கவில்லை. இந்த நிலையில் நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதில் கடந்த ஆண்டு டிசம்பர் 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் ஆம்னி வேன்களை வாடகைக்கு இயக்கினோம். ஓராண்டாகியும் வாடகை மற்றும் பெட்ரோல் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையின்றி தவிக்கும் நிலையில் நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கி உதவ வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →