நீட் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,838 பேர் பங்கேற்பு
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 4838 பேர் எழுதினர்
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 4838 பேர் எழுதினர். நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை நாமக்கல் மாவட்டத்தில் 4,838 மாணவ, மாணவியர் எழுதினர்.
இத் தேர்வுக்காக குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் அகாதெமி, பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரி, நாமக்கல் டிரினிடி அகாதெமி, பரமத்தி நவோதயா மெட்ரிக் பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளி ஆகிய 9 மையங்களில் நீட் தீர்வானது நடைபெற்றது.
தேர்வையொட்டி காலை 11 மணிக்கு மாணவ மாணவியர் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு பல்வேறு கட்ட சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு ஐந்து மணிக்கு நிறைவடைந்தது.
நீட் தேர்வு நடைபெற்ற ஒவ்வொரு மையத்திலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.