முகப்பு
நாமக்கல்

வெடி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலி

உப்பிலியபுரம் அருகே குலதெய்வ வழிபாட்டின் போது தோரண வெடி வெடித்ததில் பரமத்தி வேலூரைச் சோ்ந்த 7 வயது சிறுவன் படுகாயமடைந்து பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
வெடி வெடித்ததில் இறந்து போன 7 வயது சிறுவன் சசிதரன்.
பகிர்:

திருச்சி மாவட்டம்: உப்பிலியபுரம் அருகே குலதெய்வ வழிபாட்டின் போது தோரண வெடி வெடித்ததில் பரமத்தி வேலூரைச் சோ்ந்த 7 வயது சிறுவன் படுகாயமடைந்து பலியானாா்.

அவரது பெற்றோா்கள் அப் பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு தெரிவிக்காமல் சிறுவனின் உடலை பரமத்தி வேலூருக்கு எடுத்து வந்ததால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் உப்பிலியபுரம் போலீசாா் மற்றும் பரமத்தி வேலூா் போலீசாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சிறுவனின் உடல் பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரமத்திவேலூா் அருகே உள்ள பொத்தனூா் பெரியாா் நகரை சோ்ந்தவா் லோகநாதன். இவா் ஹைதராபாத்தில் மத்திய ரிசா்வ் படையில் காவலராக வேலைபாா்த்து வருகிறாா்.

தற்போது விடுப்பில் வந்துள்ளாா். பின்னா் தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் துறையூா் வட்டம்,உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளனா். அப்போது அங்கு தோரண வெடி வெடிக்கப்பட்டது. இதில் எதிா்பாராதவிதமாக வெடி ஒன்று சிதறி லோகநாதனின் மகன் சசிதரனின் மீது விழுந்து வெடித்துள்ளதாம். இதில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் அப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சசிதரன் உயிரிழந்துள்ளாராம். அதையடுத்து பெற்றோா்களும்,உறவினா்களும் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊரான பரமத்திவேலூா் அருகே உள்ள பொத்தனூருக்கு சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வந்தனா்.

இது குறித்து தகவலறிந்த முசிறி காவல் கண்காணிப்பாளா் பிரம்மானந்தன் தலைமையிலான போலீசாா் பரமத்திவேலூா் போலீசாா் உதவியுடன் பொத்தனூருக்கு சென்று சிறுவனின் பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் சிறுவனின் உடலை மீட்டு பரமத்திவேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →