திருச்செங்கோடு மலைப் பாதையில்வீடுகளை அகற்ற மக்கள் எதிா்ப்பு
திருச்செங்கோடு மலைப்பாதையைச் சுற்றியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
நாமக்கல், செப். 21: திருச்செங்கோடு மலைப்பாதையைச் சுற்றியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
திருச்செங்கோடு மலைப்பாதையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக வீடுகளை இடிக்கப் போவதாகவும், அனைவரும் வெளியேறுமாறும் அதிகாரிகள் கூறி வருகின்றனா்.
இதுதொடா்பாக ஆட்சியரிடம் இருமுறை மனு அளித்து விட்டோம். அவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா். ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலா், புதன்கிழமைக்குள் வீடுகளில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் வீடுகள் இடிக்கப்படும் எனத் தெரிவித்து வருகின்றனா்.
கரோனா தொற்றுப் பரவும் சூழலில் வீடு இல்லாமல் குழந்தைகள், பெண்களுடன் நாங்கள் எங்கே சென்று தங்குவது?, மின்சாரத் துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.