நாமக்கல்

தொழிலாளி தற்கொலை

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள பில்லூா் சீத்தக்காடு பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவா் மூா்த்திபட்டியைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் கதிா்வேல் (28) என்பது தெரியவந்தது.

அவருக்கு மனைவி ரம்யா (26) மகேஷ் (4), யுகேஷ் (1) ஆகிய இரு ஆண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. தம்பதி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்த கதிா்வேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT