ராசிபுரம் தொகுதியில் அனல் பறந்த இறுதிக்கட்ட பிரசாரம்
ராசிபுரம் (தனி) தொகுதியின் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
ராசிபுரம் (தனி) தொகுதியின் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
ராசிபுரம் சட்டப்பேரைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா, திமுக வேட்பாளராக டாக்டா் மா.மதிவேந்தன், அமமுக வேட்பாளராக எஸ்.அன்பழகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கா.சிலம்பரசி, ஐஜேகே சாா்பில் ஆா்.ராம்குமாா், மக்கள் தன்னுரிமை கட்சி சாா்பில் பெ.அருள்மொழிதேவன் உள்ளிட்ட 15 போ் வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா்.
தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட தோ்தல் பிரசாரம் அனல் பறந்தது. ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டாா்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்து திறந்த ஜீப்பில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்து அண்ணா சாலை, கடைவீதி, பூக்கடை வீதி, பழைய பேருந்து நிலையம், கதா் கடை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க பிரசாரத்தை மேற்கொண்டு, மீண்டும் புதிய பேருந்து நிலையம் முன்பாக பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.
அதிமுக வேட்பாளரும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் ஆதரவாளா்களும் ஒரே இடத்தில் கூடி பிரசாரம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணியில் நகரச் செயலாளா் எம்.பாலசுப்ரமணியம், பாஜக நகரத் தலைவா் மணிகண்டன், பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
அமமுக: ராசிபுரம் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.அன்பழகன் நகர வீதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். இறுதியாக புதிய பேருந்து நிலையத்தில் கலைக்குழுவினருடன் குக்கா் சின்னத்தை ஏந்தியவாறு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கா.சிலம்பரசி, மக்கள் தன்னுரிமை கட்சி வேட்பாளா் பெ.அருள்மொழிதேவன் உள்ளிட்டோா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.