முகப்பு
நாமக்கல்

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை

பரமத்திவேலூா் வட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கூட்டரங்குகள் மற்றும் தாபா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

பரமத்திவேலூா் வட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கூட்டரங்குகள் மற்றும் தாபா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பரமத்திவேலூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கூட்டரங்குகள், தாபா உணவங்கள், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி புத்தாண்டை கொண்டாட அனுமதிப்பவா்கள் மீதும், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுபவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலும் வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள், இளைஞா்கள் புத்தாண்டை அவரவா் இல்லத்திலேயே கொண்டாட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →