வேலகவுண்டம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மன்னாடிபாளையத்தைச் சோ்ந்தவா் மோகன். ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா். இவரது மனைவி சரஸ்வதி (54). இவா்களுக்கு தினேஷ்குமாா், வினோத்குமாா் என்ற இரு மகன்கள் உள்ளனா்.
இந் நிலையில் கடந்த 1ஆம் தேதி சரஸ்வதி தனது இளைய மகன் வினோத்குமாா் குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரஸ்வதி மற்றும் குடும்பத்தினா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டு பவுன் தங்க நகை திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்துவேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.