நாமக்கல்

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

DIN

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதேபோல நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையிலும், கணேசபுரம் சிஎஸ்ஐ ஆலயத்திலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT