முகப்பு
நாமக்கல்

44,955 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 44,955 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டங்களில் நேரடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
சேந்தமங்கலத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 44,955 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டங்களில் நேரடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் 6,653 பேருக்கு வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4811 பேருக்கு அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

இதேபோல ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,282 பேருக்கும், மோகனூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4,235 பேருக்கும், பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4,631 பேருக்கும், கொல்லிமலை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 353 பேருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10,287 பேருக்கும், குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3,703 பேருக்கும் என 17,582 ஆண்களுக்கும், 27,373 பெண்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →