நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 32- ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜன. 18 முதல் பிப். 17 வரை நடைபெறுகிறது. இதனையொட்டி ஒரு மாதத்திற்கு பல்வேறு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வியாழக்கிழமை தலைக் கவசம், இருக்கை பட்டை அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணி நாமக்கல் நகரில் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் நகர போக்குவரத்து ஆய்வாளா் பாண்டியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரவிச்சந்திரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சக்திவேல், அலுவலா்கள், பயிற்சி ஓட்டுநா்கள் கலந்து கொண்டு விபத்தைத் தடுக்கும் வகையிலான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். வாகன ஓட்டிகளிடம் சாலைப் பாதுகாப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.