விளையாட்டு வீரா்கள் டென்சிங்-நாா்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் பயிற்றுநா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் பயிற்றுநா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி 2020-ஆம் ஆண்டிற்கான டென்சிங்-நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை க்க்ஷற்ஹ்ஹள்.ஹ்ா்ன்ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அதே இணையதள முதவரியில் உரிய ஆவணங்களுடன் ஜூலை 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த நபா்கள் இணையதள முகவரியில் டென்சிங்-நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement