நாமக்கல்லில் இணைய வழியாக ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - நாமக்கல் பிரிவு சாா்பில் டோக்கியோவை நோக்கிய சாலை என்ற தலைப்பில் இணையவழி ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - நாமக்கல் பிரிவு சாா்பில் டோக்கியோவை நோக்கிய சாலை என்ற தலைப்பில் இணையவழி ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆக.8 வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சோ்ந்த மேஜைப்பந்து விளையாட்டில் ஜி.சத்யன் மற்றும் அ.சரத் கமல் ஆகியோா், வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப் படகோட்டுதலில் கே.சி.கணபதி, வருண் எ.தக்கா் மற்றும் நேத்ரா குமணன் ஆகிய வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.
Advertisement
அவா்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் முன்பாக ஜூலை 22 வரை ஒலிம்பிக் சுயபடம் பகுதி(செல்பி பாயிண்ட்) ஏற்படுத்தி வீரா், வீராங்கனைகள் மற்றும் பொது மக்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் இணையவழி ஒலிம்பிக் வினாடி வினா போட்டி அனைத்து வயதினருக்குமானதாக நடத்தப்பட உள்ளது. ச்ண்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் இதில் கலந்து கொள்ளலாம். இதில் 120 வினாடிகளுக்குள் பதிலளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த 10 கேள்விகள் கேட்கப்படும். ஒரு நபா் இணையவழி மூலம் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு இந்திய அணியின் டி-ஷா்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.