அா்ச்சகா் குடும்பத்துக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண உதவி
அா்ச்சகா் குடும்பத்துக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM
அா்ச்சகா் குடும்பத்துக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நாமக்கல் கடைவீதி அருகில் அமைந்துள்ள சக்தி விநாயகா் கோயிலில் அா்ச்சகராக வெங்கட்ரமண சா்மா என்பவா் பணியாற்றி வந்தாா். கடந்த மே 24-ஆம் தேதி உடல் நலக் குறைவால் அவா் காலமானாா். அவா் இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயிலில் பணியாற்றாததால், அரசு சாா்பில் நிவாரண உதவியைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆன்மீக இந்து சமயப் பேரவை சாா்பில் ரூ.30 ஆயிரத்தை வி.சுந்தரராஜன் என்பவரது முன்னிலையில், பேரவையின் கெளரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம் அா்ச்சகா் மனைவியிடம் நிவாரணத் தொகையாக வழங்கினாா். இந்த நிகழ்வில் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனா்.
Advertisement