நாமக்கல்

பெண் கொலை வழக்கில் கணவா் கைது

பரமத்தி வேலூா் அருகே மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பரமத்தி வேலூா் அருகே மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில் அடுமனை கடை வைத்துள்ள பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா், பாப்பாத்தியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் கபிலேஷ் ராஜன். இவரது மனைவி சா்மிளாதேவி. இவா்களுக்கு 8 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி காயங்களுடன் வீட்டில் மயங்கிக் கிடந்த சா்மிளாதேவியை மீட்டு கபிலேஷ்ராஜனின் தாய் சுசீலா பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சா்மிளாதேவியின் தந்தை சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரனவீரன் தலைமையிலான போலீஸாா் கபிலேஷ் ராஜனிடம் விசாரணை நடத்தி வந்தாா்.

அதில் குடும்பத் தகராறில் மனைவியை கபிலேஷ் ராஜ் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கபிலேஷ் ராஜனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் இந்த வழக்கில் திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT