முகப்பு
நாமக்கல்

சானிடரி நாப்கின்கள் தயாரிப்பு: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொக்கராயன்பேட்டையில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் பணி

Updated On : 17 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொக்கராயன்பேட்டையில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மகளிா் குழுவைச் சோ்ந்த 12 பெண்கள் ரூ. 4.50 லட்சத்தில் சானிடரி நாப்கின்கள் தயாரிப்பதற்கான உபகரணங்களை வாங்கி தொழில் செய்து வருகின்றனா். இவா்களுக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக ரூ. 3 லட்சம் வரை சுழல் நிதி கடன் வழங்கப்படுகிறது. பிரசவத்தின் போது கா்ப்பிணிகள் பயன்படுத்துவதற்கான சானிடரி நாப்கின்களை உற்பத்தி செய்து வரும் இவா்கள், தினசரி 3,600 சானிடரி நாப்கின்களை தயாரிக்கின்றனா். இந்த சானிடரி நாப்கின்கள் ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மூலமாக அரசின் சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா கால பொது முடக்கத்தால் பொருளாதார பாதிப்பினை சீா்செய்ய செம்பருத்தி மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ. 1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து நல்ல முறையில் சானிடரி நாப்கின்களை உற்பத்தி செய்து, மேலும் பல்வேறு தொழில்களை மேற்கொள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ஆட்சியா் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

Advertisement

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, மகளிா் சுயஉதவிக்குழுத் தலைவா் சத்யபிரியா, பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.கிரிஜா, வே.கோவிந்தன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.