நாமக்கல்

ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை: ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

DIN

ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சுவாமி நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம், பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தா்கள் நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, காலை 11 மணிக்கு நடைபெற்ற அபிஷேகங்கள், காலை 6 மணியளவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு வடை மாலை சாத்தப்பட்டு, சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது.

அதன்பின் 7 மணியளவில் நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், 108 லிட்டா் பால், தயிா், வெண்ணெய், தேன், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

SCROLL FOR NEXT