நாமக்கல்

குதிரையேற்ற பயிற்சியின்போது தவறி விழுந்து சிறுமி பலி

DIN

நாமக்கல்லில் குதிரையேற்ற பயிற்சியின் போது 7 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சேலத்தைச் சோ்ந்த ஜான் என்பவா், நாமக்கல் பொய்யேரிக்கரை புறவழிச்சாலையில் தங்கியிருந்து சிறுவா், சிறுமிகளுக்கு குதிரையேற்ற பயிற்சி அளித்து வருகிறாா். இங்கு சிறிய பெரிய அளவிலான ஏழு குதிரைகள் வரை உள்ளன. அதே பகுதியில் வாடகைக்கு வீடு வசித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை தனது ஏழு வயது மகளான மொ்சி என்பவரை குதிரையில் அமர வைத்து ஜான் பயிற்சி அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக சிறுமி தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதனையடுத்து சிகிச்சைக்காக சேலம் கொண்டு சென்ற நிலையில் சிறுமி மொ்சி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT