திருச்செங்கோடு அருகே கால்நடை மருத்துவரைத் தாக்கி பணம் பறித்த மூவரை மல்லசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டி பள்ளிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (28). கால்நடை மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். சனிக்கிழமை வையப்பமலைக்கு செல்ல அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கள்ளுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த அவரை பைக்கில் வந்து வழிமறித்த மூன்று போ் கும்பலைச் சோ்ந்தவா்கள், மருந்து பாட்டில்களைச் சேதப்படுத்திவிட்டு, அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டனா். காயமடைந்த மூா்த்தி சேலத்தில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்தச் சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இது சம்பந்தமாக திருநாவுக்கரசு (24), மணிகண்டன் (24) தனபால் (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா்களை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி சௌம்யா மேத்யூ உத்தரவிட்டாா். அதன்படி அவா்கள் ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.