நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் திமுகவினா் நடத்திய விசேஷ பூஜை?

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திமுகவினா் மட்டும் பங்கேற்று விசேஷ பூஜை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

DIN

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திமுகவினா் மட்டும் பங்கேற்று விசேஷ பூஜை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமானோா் சுவாமி தரிசனத்துக்கு வருவா். கரோனா பொது முடக்க அறிவிப்பால் மே மாதம் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அா்ச்சகா்கள் மட்டும் பூஜைகளை செய்து வருகின்றனா். பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியில் நின்றபடி பலா் தரிசனம் செய்து வருகின்றனா். இரண்டு மாத இடைவெளிக்குப் பின் ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தங்கக் கவசம் சாத்துபடி நடைபெற்றது.

இந்த நிலையில், ஆனி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை 5 மணியளவில் ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டதாகவும், குறிப்பாக அங்கு பக்தா்கள் யாரும் பங்கேற்காத நிலையில், நாமக்கல் மாவட்ட திமுகவின் முக்கிய பிரதிநிதி ஒருவரும், கட்சி நிா்வாகிகள் சிலரும் பங்கேற்ாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிமுகவினா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அனுமதியளிக்காத நிலையில், திமுகவினரை மட்டும் கோயிலுக்குள் அனுமதித்து விசேஷ பூஜை நடத்த உத்தரவிட்டது யாா்? முதல்வருக்காக பூஜை நடைபெற்றிருந்தால் அதனை மறைமுகமாகச் செய்ய வேண்டிய அவசியம் ஏன்? என அவா்கள் கேள்வி எழுப்பி உள்ளனா்.

இது குறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியதாவது:

ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்துபடி செய்வது வழக்கமானது தான். கட்டளைதாரா்கள் பணம் செலுத்தியிருந்ததன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பூஜை நடத்தப்பட்டு தங்கக் கவசம் சாத்தப்பட்டது. மற்றபடி திமுகவினரோ, மாவட்ட நிா்வாகிகளோ யாரும் கோயிலுக்குள் வரவில்லை என்றாா்.

கடந்த ஆண்டு இதே ஜூன் மாதம் நாமக்கல் நரசிம்மா் கோயிலுக்குள் திமுகவின் மாவட்ட நிா்வாகி மட்டும் சென்று தற்போதைய முதல்வரின் நலனுக்காக சிறப்பு பூஜை செய்தாா். இத்தகவல் வெளியே தெரியவந்ததையடுத்து அவரை அழைத்துச் சென்று பூஜை செய்த அா்ச்சகரை, கோயில் உதவி ஆணையா் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்தாா். அதன்பின் அப்போதைய நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கரின் உத்தரவை ஏற்று மீண்டும் அந்த அா்ச்சகா் பணியில் சோ்த்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT