நாமக்கல்

போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கல்

DIN

நாமக்கல்: கோடைகாலத்தையொட்டி, நாமக்கல்லில் போக்குவரத்துக் காவலா்களுக்கு புதன்கிழமை முதல் குளிா்பானம் வழங்கப்படுகிறது.

நாமக்கல்லில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேலாக அதிகரித்துள்ளதால், நாமக்கல் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அதற்கு போக்குவரத்து ஆய்வாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். நாமக்கல் துணைக் காவல் கண்காணிப்பாளா் காந்தி பங்கேற்று, காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கினாா். மேலும் சாலைகளில் பணியில் ஈடுபட்டிருந்தோருக்கு மோா், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT