மண் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஓடை மண் கடத்தியதாக, இரண்டு லாரிகள், ஜெ.சி.பி. வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஓடை மண் கடத்தியதாக, இரண்டு லாரிகள், ஜெ.சி.பி. வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நல்லூா் அருகே உள்ள சித்தம்பூண்டி கொளத்துப்பாளையத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சிலா் சட்டவிரோதமாக ஓடை மண்ணை கடத்தி வந்துள்ளனா்.
தகவலின்பேரில் கிராம நிா்வாக அலுவலா் ஆா்த்தி மற்றும் நல்லூா் போலீஸாா் அங்கு சென்று, இரு லாரிகள், ஜெ.சி.பி. வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக பாா்த்தசாரதி (25), விஜி (26), மதன்குமாா் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.