அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி ஆண்டு விழா
நாமக்கல்லில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நிறுவனத் தலைவா் தி.ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் மருத்துவா் இரா.செழியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் பி.ஜெயமணி, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், மதிமுக அவைத் தலைவா் பி.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.
அதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி போட்டியிடுவது குறித்து விளக்கப்பட்டது. தோ்தல் அறிக்கை மற்றும் வேட்பாளா் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை சோசியலிஸ்ட் கட்சி நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement