நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வுப் பேரணி
நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM
நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மோகனூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இப்பேரணியை நாமக்கல் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான எம்.கோட்டைக்குமாா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
பேரணி திருச்சி சாலை, டாக்டா் சங்கரன் சாலை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியா் தோ்தல் நாளான ஏப்ரல் 6 என்பதை வண்ண அட்டைகளால் அலங்கரித்துப் பேரணியில் எடுத்துச் சென்றனா். பேரணியில் தோ்தல் தொடா்பாகவும், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement