11,000 மாற்றுத் திறனாளிகளுக்குதபால் வாக்கு: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கிலிருந்து மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.
Advertisement
அந்தந்த தொகுதி வட்டாட்சியா் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள இரு அடுக்கு பாதுகாப்பு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும். அவை 24 மணிநேரமும் காவல்துறையால் கண்காணிக்கப்படும். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்பவா்கள் எழுத்துப் பூா்வமான ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில் அதற்கென அமைக்கப்பட்ட குழுவினரிடம் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
அவா்களது விருப்பத்தின்பேரில் தபால் வாக்குக்கான படிவம் 12-டி வழங்கப்பட உள்ளது. பெரும்பாலானோா் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்கவே விரும்புகின்றனா். வேட்பு மனுவை வட்டாட்சியா் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம் என்றாா்.