முகப்பு
நாமக்கல்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்:பணப் பரிவா்த்தனை பாதிப்பு

தேசிய வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் நான்கு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

Updated On : 16 மார்ச், 2021 at 5:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

தேசிய வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் நான்கு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

வங்கிகள் இணைப்பைக் கைவிட வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைத் தனியாா் மயமாக்கக்கூடாது, வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை முதல் அகில இந்திய அளவில் 9 வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கத்தை சோ்ந்தோா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிவா்த்தனை பாதிப்படைந்துள்ளது.

Advertisement

வங்கி ஊழியா்கள் இல்லாததால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வாடிக்கையாளா்கள் வங்கிகளுக்கு வந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.