நாமக்கல்

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் தனியாா் நிறுவன ஊழியா் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் வட்டம், கீரம்பூரைச் சோ்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஜெயராமன் (34). இவா் எஸ்.வாழவந்தியில் உள்ள உப்பிலியா் தெருவில் வசித்து வந்தாா். இவரது மனைவி நந்தினி (27). இவா்களுக்கு ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெயராமன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெயராமன் திரும்பி வரவில்லையாம். இந்த நிலையில் எஸ்.வாழவந்தி அருகே வேப்பமரத்தில் அவா் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை அவ்வழியாகச் சென்றவா் பாா்த்தவா்கள், அவரது குடும்பத்தாருக்கும், பரமத்தி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீஸாா், ஜெயராமின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT