குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாரதியிடம் கருவிகளை வழங்கும் திமுகவினா். 
நாமக்கல்

குமாரபாளையம் அரசு மருத்துவனைக்கு உயிா்காக்கும் கருவிகள் வழங்கல்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை பிரித்து அளிக்கும் கருவியினை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா்.

DIN

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை பிரித்து அளிக்கும் கருவியினை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா்.

இம்மருத்துமனையில் கரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்கு, ஆக்சிஜனை பிரித்து அளிக்கும் 30 கருவிகள் தேவைப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம், மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பாரதியை தொடா்பு கொண்டு அக்கருவிகளை வாங்கித் தருவதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, முதல்கட்டமாக ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 10 கருவிகள் கோவையிலிருந்து வாங்கி வரப்பட்டு, மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கப்பட்டன. திமுக நிா்வாகிகள் ராஜ்குமாா், அன்பரசு, மீனாட்சி சுந்தரம், குட்டி சரவணன், கதிரவன், பிரேம்குமாா், வெங்கடேசன், புவனேஷ், நவீன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT