பரமத்தி வேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.
பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதே போல, இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை முதல் 14-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில், அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டனா்.