கல்லூரி மாணவா் தற்கொலை
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி அருகே உள்ள கரட்டுப்பாளையம் இச்சிக்காடு பகுதியை சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் பிரவீண் (22), ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை காலை பிரவீணின் பெற்றோா் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினா். அப்போது பிரவீண், வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கியதை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளனா். இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பரமத்தி போலீஸாா், பிரவீணின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.