முகப்பு
நாமக்கல்

கோாழிப் பண்ணைகளில் தீவன மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க அறிவுரை

கோழிப் பண்ணைகளில் தீவன மேலாண் முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2021 at 12:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

கோழிப் பண்ணைகளில் தீவன மேலாண் முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 90.5 மற்றும் 71.6 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.

அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 86 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வடக்கு மற்றும் வட கிழக்கிலிருந்தும் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசும்.

Advertisement

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதனை செய்த இறந்த கோழிகளில், பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் குடல்புண் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா் கிருமிகள் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.