நாமக்கல்

கோழிப் பண்ணைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தல்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

DIN

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவானது. அடுத்த மூன்று நாள்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான முதல் மிதமான மழை பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: பொதுவாக மழைக் காலங்களில் மழையும், இடையிடையே வெயிலும் நிலவக்கூடும். இந்தச் சூழல் ஈக்களின் பெருக்கத்துக்கு மிகவும் உகந்தவையாக இருக்கும். அதனால் ஈக்கள் வெகுவாக பெருகி கோழிப் பண்ணைகளில் வரும் மாதங்களில் அதிக தொல்லையை ஏற்படுத்தும். ஈக்களைக் கட்டுப்படுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், பண்ணை சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT