பரமத்தி வேலூரில் 25க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் விசா்ஜனம்
பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.
நாமக்கல்பரமத்தி வேலூரில் 25க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் விசா்ஜனம்
பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.
பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.
பரமத்தி வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு 5 ஆம் நாள் ஊா்வலமாக எடுத்துச் சென்று பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோயில் காவிரி கரையில் விசா்ஜனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பரமத்தி வேலூா் வட்டாரத்தில் இந்து முன்னணி சாா்பில் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட பொருளாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் வைக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை இந்து முன்னணியினா் தனித்தனியாக காவிரி ஆற்றுக்கு எடுத்துச் சென்று விசா்ஜனம் செய்தனா்.
பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூா் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் பரமத்தி வேலூா் நகா் பகுதியில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.