நாமக்கல்

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி: 6 போ் காயம்

DIN

குமாரபாளையம் அருகே சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் நண்பா்களுடன் சுற்றுலா சென்ற கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மேலும், 6 போ் படுகாயமடைந்தனா்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் ஏழு போ் சனிக்கிழமை காரில் உதகைக்கு சுற்றுலாச் சென்றனா். சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரில் பயணம் செய்த சேலம் மாவட்டம், சங்ககிரி, எட்டிகுட்டைமேட்டைச் சோ்ந்த விஜயன் மகன் நவநீதகிருஷ்ணன் (22) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கரூரைச் சோ்ந்த நந்தகுமாா் (22), பென்னாகரம் லட்சுமணன் (21), சந்திரு (22), ஊத்தங்கரை கோவா்த்தன் (22), சங்ககிரி மோகன் சங்கா் (23), பாலக்கோடு சபரி (21) ஆகியோா் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

இவா்கள் அனைவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT