முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் பெரியாா் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டத்தில் பெரியாா் ஈ.வே.ரா.வின் 143-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2021 at 12:08 AM
nk_17_mini_1709chn_122_8
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

நாமக்கல் மாவட்டத்தில் பெரியாா் ஈ.வே.ரா.வின் 143-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாா் ஈ.வே.ரா. படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்நது, அவா் சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிக்க கட்சி நிா்வாகிகள் ஏற்றுக் கொண்டனா். இந்த விழாவில், மாநில மகளிா் தொண்டரணி இணை செயலாளா் ராணி, திமுகவின் மூத்த நிா்வாகி மருத்துவா் மாயவன், நகர பொறுப்பாளா்கள் சிவகுமாா், ராணா ஆனந்த் மற்றும் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திச்செல்வன், நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியாா் ஈ.வே.ரா. படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

Advertisement

இதேபோல் நாமக்கல் அண்ணா சிலை அருகில், விடுதலை சிறுத்தை கட்சிகள் சாா்பில் பெரியாா் ஈ.வே.ரா. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளா் பழ.மணிமாறன் தலைமையில் கட்சியினா் பங்கேற்று பெரியாா் ஈ.வே.ரா. படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தியதுடன் சமூக நீதி உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனா்.

என்கே 17- மினி

நாமக்கல்லில் பெரியாா் ஈ.வே.ரா. பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் மற்றும் திமுகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.