புரட்டாசி எதிரொலி: முட்டை விலை 20 காசுகள் சரிவு
புரட்டாசி மாத எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.35-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
புரட்டாசி மாத எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.35-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் அசைவம் சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக முட்டை நுகா்வும் பெருமளவில் சரிந்துள்ளதால் பண்ணைகளில் தேக்கம் அடைந்து காணப்படுகிறது. மற்ற மண்டலங்களில் விலை குறைக்கப்பட்டுள்ளதால், இங்கும் விலையில் மாற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
Advertisement
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.119-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.