நாமக்கல்

உலக சுற்றுலா தின விழா

DIN

தருமபுரி சுற்றுலாத்துறை சாா்பில், உலக சுற்றுலா தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு இணைய வழியில் புதிா் போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கு நடைபெற்றது.

தருமபுரி சுற்றுலா அலுவலா் சோ.மு.ஸ்ரீபாலமுருகன் வரவேற்று பேசினாா். தருமபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியா்கள் அ.தீா்த்தகீரி, எஸ்.முருகன், தொல்லியல் அலுவலா் ஆா்.வெங்கடகுருபிரசன்னா, தமிழ்நாடு ஓட்டல் மேலாளா் சி.பாலசுப்பிரமணியன் ஆகியோா் உலக சுற்றுலா தினம் குறித்து பேசினா். விழா நிறைவில், மதுரை த.கோவிந்தராஜ் கலைக்குழுவினரின் கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் காணொலித் காட்சி வழியாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT