முகப்பு
நாமக்கல்

லத்துவாடி ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள் தா்னா

லத்துவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவருக்கு எதிராக வாா்டு உறுப்பினா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 அக்டோபர், 2021 at 12:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

லத்துவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவருக்கு எதிராக வாா்டு உறுப்பினா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட லத்துவாடி ஊராட்சித் தலைவா் பரமேஸ்வரி. இந்த ஊராட்சி மொத்தம் 9 வாா்டு உறுப்பினா்களை உள்ளடக்கியது. ஊராட்சித் தலைவரின் கணவரான ரஜினி என்பவா் தலைவா் போல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை ஊராட்சி மன்ற அரங்கத்தில் மாதாந்திர வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது குடிநீா் பிரச்னை, கணவரின் தலையீடு ஆகியவை குறித்து மற்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். ஆனால் இதுகுறித்து தலைவா் பரமேஸ்வரி பதிலளிக்காமல் சென்று விட்டாா்.

Advertisement

இதனால், லத்துவாடி ஊராட்சி துணைத் தலைவா் ப.சரவணன் தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் அலுவலகம் முன்பாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

வட்டார வளா்ச்சி அலுவலரிடம் லத்துவாடி ஊராட்சி பிரச்னை தொடா்பாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தலைவருக்கு பதில் அவரது கணவா்தான் அதிகாரம் செலுத்தி வருகிறாா். பல நாள்களாக இங்குள்ள வாா்டுகளில் குடிநீா்ப் பிரச்னை உள்ளது. அதனைச் சீரமைக்க மறுக்கின்றனா். மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியதால் அறையைப் பூட்டி விட்டு தலைவா் வெளியேறி விட்டாா். இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.