முகப்பு
நாமக்கல்

ஏப்.12-இல் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சாா்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் ஏப்.12-இல் ராசிபுரத்தில் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சாா்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் ஏப்.12-இல் ராசிபுரத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பா.ராஜசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராசிபுரம் வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் வட்டார வளமையம் சாா்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் நடைபெறும் முகாமி பல்வேறு சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று பரிசோதனை செய்கின்றனா். இதில் தேசிய அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கப்படுவதுடன், தேவையானவா்கள் அறுவை சிகிச்சைக்கும் தோ்வு செய்யப்படுவா். இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்கான குடும்ப அட்டை நகல், ஆதாா்அட்டை நகல், 5 பாஸ்போா்ட் போட்டோ போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.