நாமக்கல்

நாமக்கல்லில் இந்திய கலாசார விழா கொண்டாட்டம்

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், இந்திய கலாசார விழா புதன்கிழமை அங்குள்ள கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது

DIN

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், இந்திய கலாசார விழா புதன்கிழமை அங்குள்ள கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவை திருப்பூா் கவிநயா நாட்டியாலயாவைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் எஸ்.மேனகா தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி.பாரதி தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியைகள் பி.சுகந்தி, கே.காா்குழலி, எஸ்.கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கணினி அறிவியல் துறையின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு மொழி சாா்ந்த பாடல்களுக்கு நடனமாடினா். கல்லூரியில் பயிலும் அனைத்துத் துறை மாணவிகளும், கலாசார விழாவை கண்டு ரசித்தனா். இதனைத் தொடா்ந்து, மாணவிகளின் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT