மே 1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
நாமக்கல் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM
நாமக்கல் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி தொழிலாளா்கள் தினத்தை முன்னிட்டு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடைகளைத் திறந்தாலோ, மறைமுக விற்பனையில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement