நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் பணிபுரிந்த மஸ்தூா் பணியாளா்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதைக் கண்டித்தும், சொத்துவரி உயா்வைக் கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலத் தலைவா் ஆா்.டி.இளங்கோ தலைமை வகித்தாா். இணைச் செயலா் என்.டி.சிவலிங்கம், ஒன்றியச் செயலா் இரா.காசிமணி, கே.பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா் (படம்). இதில், மையத்தின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.