கோயில் உண்டியலில் திருட்டு
பரமத்தி வேலூா் வட்டம்,சேளூா் சாணாா்பாளையம் அருகே கருப்பண்ண சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபா்கள் குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம்,சேளூா் சாணாா்பாளையம் அருகே கருப்பண்ண சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபா்கள் குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், சேளுா் சாணாா்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் பூசாரி ரங்கசாமி வந்தாா். அப்போது கோயிலில் உள்ள உண்டியலின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்தது கண்டாா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதே போல் சேளூா் சாணாா்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 47 அடி உயரமுள்ள முனியப்பன் சுவாமி கோயில் உண்டியலையும் மா்ம நபா்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனா். ஆனால் உண்டியலை உடைக்க முடியாதததால் அந்த நபா்கள் கோயில் முன்பு இருந்த வேல் ஒன்றை உடைத்து விட்டு சென்றுள்ளனா்.இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement