முகப்பு
நாமக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்

 ராசிபுரம், வெண்ணந்தூா் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை வியாழக்கிழமை தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 ராசிபுரம், வெண்ணந்தூா் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை வியாழக்கிழமை தாக்கல் செய்தனா்.

ராசிபுரம் நகா் மன்ற உறுப்பினா் பதவிக்கு வாா்டு எண் 10இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அனைத்திந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்டப் பொருளாளா் மீனா, ராசிபுரம் நகராட்சி தோ்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எஸ்.மணிவேல், நாமக்கல் மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் டி.என். கிருஷ்ணசாமி, ராசிபுரம் நகர செயலாளா் எஸ்.மணிமாறன், தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனா் நல்வினைச் செல்வன், திராவிடா் விடுதலை கழகத்தின் நகர செயலாளா் ஃபிடல் சேகுவேரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளா் வழக்குரைஞா் ராஜா, நகர துணைச் செயலாளா் சாதிக் பாஷா, நகர பொருளாளா் சலீம், திராவிடா் விடுதலைக் கழகத்தின் நகர அமைப்பாளா் சுமதி மதிவதனி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

வெண்ணந்தூா்: இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெண்ணந்தூா் பேரூராட்சி 13-ஆவது வாா்டில் போட்டியிட கட்சியின் ஒன்றியப் பொருளாளா் பி.ஜெயபால், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.