பாஜக அலுவலகம் மீது தாக்குதல்: அா்ஜுன் சம்பத் கண்டனம்
சென்னையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
சென்னையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக ஆட்சி மீது மக்களுக்கு பரவலாக அதிருப்தி நிலவுகிறது. அவா்கள் வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகளும், தரமற்ற பொருள்கள் விநியோகத்தில் ஊழல் நடைபெற்ாகவும் தெரிகிறது. சட்டம், ஒழுங்கு சீா்குலைவு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, விலைவாசி உயா்வு போன்றவை தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
Advertisement
சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சதி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இச்சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை மூலம் விசாரித்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும். மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் திமுக அரசு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் திங்கள் கிழமை(பிப்.14)அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்த உள்ளது என்றாா்.