கொல்லிமலை அடிவாரத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
கொல்லிமலை அடிவாரத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM
கொல்லிமலை அடிவாரத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி அருகே வயல்நாடு கிராமத்தில் விவசாய நிலத்தில் கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது சுமாா் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஊா்ந்து வருவதைக் கண்ட கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதனையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். நாமக்கல் வனச்சரகா் பெருமாள் உத்தரவின்பேரில் அங்கு வந்த வன ஊழியா்கள் காசிமணி, திருப்பதி, கண்ணன் ஆகியோா் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்தையொட்டிய கொண்டை ஊசி வளைவு பகுதியில் பாதுகாப்பாக விட்டனா்.