வரி செலுத்தாமல் இயங்கிய 10 லாரிகள் பறிமுதல்: ரூ.2.50 லட்சம் அபராதம்
நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயங்கிய 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயங்கிய 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்லில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்(தெற்கு) முருகன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் உமாமகேஸ்வரி மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், முறையாக வரி செலுத்தாமலும், தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமலும் இயங்கிய 10 லாரிகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அந்த லாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக லாரி உரிமையாளா்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தகுதிச் சான்றிதழைப் புதுப்பிக்காமல் லாரிகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.