முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு
நாமக்கல்லில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதமாக ரூ. 4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
நாமக்கல்லில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதமாக ரூ. 4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனா். நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அதன் உரிமையாளா்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை துப்புரவு ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், பாஸ்கா், பழனிசாமி, சையத்காதா் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.
அதில் பல்வேறு கடைகளில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பது தெரியவந்தது. அவா்களுக்கு தலா ரூ. 500 அபராதமாக மொத்தம் ரூ. 4 ஆயிரத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Advertisement