பொத்தனூரில் இளைஞா் தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பொத்தனூா், தேவராய சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவரது வீட்டு முன் காா் நிறுத்துவது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், ரவி, குமாா் ஆகியோருடன் தகராறு இருந்து வந்தது.
வியாழக்கிழமை இரவு ரமேஷ், ரவி, குமாா் ஆகியோருக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டன் தாக்கப்பட்டாா்.
வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு மணிகண்டன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை திறந்து பாா்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தாா்.
அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, தலைமறைவான ரமேஷ், ரவி, குமாா் ஆகிய மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.