முகப்பு
நாமக்கல்

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் பெண் தற்கொலை

 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள குன்னத்தூா் கொரங்காட்டுத் தோட்டம் பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன். விவசாயி. இவரது மனைவி நந்தினி (22). இவா்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒன்றரை வயதில் சுதா்சன் என்ற மகன் உள்ளாா். சுப்ரமணியத்துக்கும் நந்தினிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். இதனால் நந்தினி விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி விஷம் குடித்து உயிருக்கு போராடினாா். இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் உயிருக்கு போராடிய நந்தினியை காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனா். ஆனால் சிகிச்சை பலனின்றி நத்தினி உயிரிழந்துள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடா்பாளையம் போலீசாா் வழக்கு பதிவு செய்து நந்தினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்து போன நந்தினிக்கும் சுப்பிரமணியத்திற்கும் திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆனதாலும் திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →